ADDED : ஜூலை 22, 2026 01:43 AM

20,884
ஆந்திர அரசு, ராயலசீமா பகுதியில் பாசன உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், நவீனமாக்கவும், 20,884 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது
59
கடந்த ஜன., - ஜூனில், நாட்டின் தகவல் மைய துறை 59% வளர்ச்சி கண்ட நிலையில், கடந்தாண்டின் 162 மெ.வா., திறனிலிருந்து, நடப்பாண்டில் 258 மெ.வா., ஆக அதிகரித்துள்ளது.
4
பருவ மழை உள்ளிட்ட காரணங்களால், நடப்பு நிதியாண்டில் டிராக்டர் விற்பனை வளர்ச்சி, 1 - 4% வரை இருக்கும் என்று, இக்ரா நிறுவனம் கணித்துள்ளது.
1.40
உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து, கடந்த ஜன., - ஜூனில், 1.40% உயர்ந்துள்ளது. விமான சந்தையில் இண்டிகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆகாசா பங்கு அதிகரித்துள்ளது.
1.42
கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில், நடந்த ரூ.1.42 லட்சம் கோடி மோசடியில், ரூ. 6,389 கோடி மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
