ADDED : நவ 03, 2024 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:'யமஹா இந்தியா' நிறுவனத்தின் புதிய தலைவராக இட்டாரு ஒட்டானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றி உள்ளார்.
இதுதொடர்பாக ஒட்டானி கூறியிருப்பதாவது:
இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப, உலக சந்தையில் இருக்கும் யமஹாவின் பைக்குகளை இங்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
சந்தையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மட்டுமல்லாமல்; வடிவமைப்பு, தரம் மற்றும் புதுமை ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்து, நேர்த்தியான மற்றும் ஸ்போர்ட்டி யான இருசக்கர வாகனங்களை ஊக்குவிப்பதில் எங்கள் கவனம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.