sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஜெர்மனி 'பிரான்ஹாபர்' உடன் இணைந்து 'டிட்கோ' ஆய்வு

/

ஜெர்மனி 'பிரான்ஹாபர்' உடன் இணைந்து 'டிட்கோ' ஆய்வு

ஜெர்மனி 'பிரான்ஹாபர்' உடன் இணைந்து 'டிட்கோ' ஆய்வு

ஜெர்மனி 'பிரான்ஹாபர்' உடன் இணைந்து 'டிட்கோ' ஆய்வு


ADDED : பிப் 19, 2025 10:56 PM

Google News

ADDED : பிப் 19, 2025 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தை வரும், 2030க்குள், 86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, அதாவது ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவெடுக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதவிர, தமிழக தொழில் துறையில் நிலவும் பிரச்னை, அவற்றுக்கு காண வேண்டிய தீர்வு உள்ளிட்டவை தொடர்பாக, ஜெர்மனியின், 'பிரான்ஹாபர் இன்ஸ்டிடியூட்' உடன் இணைந்து, தொழில் துறையை ஆய்வு செய்யும் பணியில், 'டிட்கோ' நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக, உற்பத்தி உள்ளிட்ட ஒவ்வொரு துறையினரிடமும் கருத்து, ஆலோசனை கேட்கப்பட உள்ளன.

இதுகுறித்து, டிட்கோ அறிக்கையில், 'பிரான் ஹாபர் உடன் இணைந்து, தமிழகத்தில் புதுமை மற்றும் அறிவு சூழல் அமைப்பு ஆய்வு செய்யப்படுகிறது; இது, தொழில் துறைக்கும், ஆராய்ச்சிக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து, வலுவான, புதுமையான தமிழகத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது' என, தெரிவித்து உள்ளது.






      Dinamalar
      Follow us