sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

துாத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் பெரிய கப்பல்களை கையாள வசதி

/

துாத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் பெரிய கப்பல்களை கையாள வசதி

துாத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் பெரிய கப்பல்களை கையாள வசதி

துாத்துக்குடி துறைமுகத்தில் விரைவில் பெரிய கப்பல்களை கையாள வசதி


ADDED : டிச 22, 2024 01:37 AM

Google News

ADDED : டிச 22, 2024 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய வளர்ச்சி திட்டங்கள் குறித்து, ஆணையத் தலைவர் சுசந்த்குமார் புரோகித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வளர்ச்சி திட்டங்கள்

 306 மீட்டர் நீளமும்; 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக, மூன்றாவது வடக்கு சரக்கு தளம் ஆழப்படுத்தும் பணி, வரும் பிப்ரவரி மாதம் முடிவடையும்

 100 முதல் 120 டன் திறன் கொண்டு நகரும் பளு துாக்கி இயந்திரங்கள், வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிறுவப்பட்டு, இடைக்கால செயல்பாடுகள் துவக்கப்படும்

 ஆண்டுக்கு 70 லட்சம் டன் சரக்கு வெளியேற்றத்திற்கு வசதியாக, மூன்றாவது வடக்கு சரக்கு தளத்தை இயந்திரமயமாக்கும் திட்டம் 2026 டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது

 கப்பல் வரும் நுழைவாயிலை, 152.40 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தும் பணி, 15.24 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. பணி முடிந்ததும், 49 மீட்டர் அகலமும், 366 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாள முடியும்

 இரண்டாவது வடக்கு சரக்கு தளத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக, ஒரு நாளில் கூடுதலாக 25,000 டன் சரக்குகளை கையாளும் நோக்கத்துடன், 100 டன் திறன் கொண்ட நகரும் பளு துாக்கி இயந்திரம் வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் நிறுவப்பட உள்ளது

 காற்றாலை இறகுகள் மற்றும் உபகரணங்களை கையாளுவதற்காக, 470 மீட்டர் நீளம் கொண்ட 30 ஹெக்டேர் சேமிப்பு பகுதியுடன் கூடிய ஒரு பிரத்தியேகமான முனையத்தை நிறுவ, துறைமுகம் திட்டமிட்டுள்ளது

 501 ஏக்கர் நிலப்பரப்பை நான்கு நிறுவனங்களுக்கு ஒதுக்கி, 41,860 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை ஹைட்ரஜன், அமோனியா உற்பத்தி மற்றும் சேமிக்கும் வசதிகள் அமைப்பதற்காக வழங்கப்பட்டுஉள்ளது

 பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியாவை, ஆண்டுக்கு 20 லட்சம் டன் அளவுக்கு கையாளு வதற்கு தேவையான சரக்கு தள வசதி மற்றும் உள்கட்டமைப்பை நிறுவும் பணியில் துறைமுகம் முழு கவனம் செலுத்தி வருகிறது.






      Dinamalar
      Follow us