விரைவாக மாசு கட்டுப்பாட்டு அனுமதி: சிறு, குறு நிறுவனங்கள் வலியுறுத்தல்
விரைவாக மாசு கட்டுப்பாட்டு அனுமதி: சிறு, குறு நிறுவனங்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 25, 2026 01:28 AM

சென்னை:தமிழகத்தில் புதிய தொழில் துவங்க, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு ஒரே அனுமதி அளிக்கவும், இயந்திரங்கள் மீதான முதலீட்டு மதிப்பு அடிப்படையில், கட்டணம் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தொழிற்சாலைகள் மாசு குறியீட்டின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை என, வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
சிவப்பு பிரிவில் உள்ள ஆலைகள் அதிக மாசுபடுத்துவதாகவும், ஆரஞ்சு பிரிவு ஆலைகள் நடுத்தர மாசு, பச்சை பிரிவு ஆலைகள் குறைவான மாசு, வெள்ளை பிரிவு ஆலைகள் மிக குறைவான மாசுபடுத்துவதாகவும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
ஒரு தொழிலை துவக்குவதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், இரண்டு அனுமதிகளை அளிக்கிறது. அதன்படி, தொழிலை துவக்கும் முன் நிறுவுவதற்கான அனுமதியும், அந்த அனுமதிக்கு ஏற்ப ஆலை அமைத்திருப்பதை உறுதி செய்ய இயக்குதலுக்கான அனுமதியும் அளிக்கப்படுகின்றன.
எனவே, சிறு, குறுந்தொழில்களுக்கு ஒரே அனுமதி அளிக்குமாறு அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

