ADDED : மே 08, 2025 12:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்க வங்கியான 'வெல்ஸ் பார்கோ', வரும் 2027ம் ஆண்டு இறுதிக்குள் அதன் சென்னை அலுவலகத்தை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில், பெங்களூரு, ஹைதராபாத், சென்னை ஆகிய மூன்று நகரங்களில் வெல்ஸ் பார்கோ இயங்கி வருகிறது. 10,000க்கும்அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தனது சேவைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, வரும் 2027 இறுதிக்குள் சென்னை அலுவலக செயல்பாடுகளை படிப்படியாக முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக, கடந்த வாரம் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளது. பணி நீக்கம் குறித்து எதுவும் தெரிவிக்காத நிறுவனம், பணியாளர்கள் பெங்களூரு அல்லது ஹைதராபாத் அலுவலகங்களில் பணியாற்றும் வகையில், இடமாறுதலுக்கு தயாராக அறிவுறுத்தியுள்ளது.

