sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் தமிழகத்தில் 5,000ஐ தாண்டியது

/

பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் தமிழகத்தில் 5,000ஐ தாண்டியது

பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் தமிழகத்தில் 5,000ஐ தாண்டியது

பெண்கள் நடத்தும் ஸ்டார்ட் அப் தமிழகத்தில் 5,000ஐ தாண்டியது


ADDED : பிப் 12, 2025 10:40 PM

Google News

ADDED : பிப் 12, 2025 10:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில் ஸ்டார்ட் அப்களை துவக்க, பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், பெண்கள் தலைமையின் கீழ் செயல்படும் நிறுவனங்கள் எண்ணிக்கை, 5,000ஐ தாண்டியுள்ளது.

தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், புத்தொழில் ஆதார நிதி திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்கிறது. இதுதவிர, முதலீடு, சந்தை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்கிறது. இதனால், தமிழகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்குவது அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இருந்து, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையில் பதிவு செய்துள்ள, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 10,399ஆக உள்ளது.

இதில், பெண்கள் தலைமையின் கீழ் செயல்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை, 5,156 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலுள்ள மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில், 50 சதவீதத்துக்கும் அதிகமானவை சென்னையில் உள்ளன. அடுத்து, கோவை, மதுரையில் உள்ளன.






      Dinamalar
      Follow us