sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

கிரிப்டோ இனி டிஜிட்டல் சொத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

/

கிரிப்டோ இனி டிஜிட்டல் சொத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கிரிப்டோ இனி டிஜிட்டல் சொத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கிரிப்டோ இனி டிஜிட்டல் சொத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : அக் 28, 2025 12:10 AM

Google News

ADDED : அக் 28, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கி ரிப்டோகரன்சியை இந்திய சட்டத்தின் கீழ், டிஜிட்டல் சொத்தாக பார்க்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

கிரிப்டோ எக்சேஞ்ச் ஆன வாஷிரக்ஸில், கடந்த ஆண்டு மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்றது. அப்போது பல்வேறு கிரிப்டோக்கள் முடக்கப்பட்டன.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன், இந்திய சட்டத்தின் கீழ், கிரிப்டோகரன்சிகள் சொத்தாக தகுதி பெறுவதாக கூறினார்.

கிரிப்டோகரன்சி என்பது சட்ட பூர்வமானது இல்லை என்றாலும், அது ஒரு சொத்துக்கான அனைத்து அத்தியாவசிய பண்புகளையும் கொண்டிருக்கிறது என அவர் கூறியுள்ளார். வருமான வரி சட்டத்தின் பிரிவு 2(47ஏ)யின் கீழ், கிரிப்டோகரன்சிகளை மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளாக கருத வேண்டும் என, நீதிபதி தன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கிரிப்டோ எக்சேஞ்சுகளை சுயாதீன தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்; வாடிக்கையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிதிகளை பிரித்து ஆய்வு செய்ய வேண்டும்; கே.ஒய்.சி., நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் எனவும், உத்தரவில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் போது, முதலீட்டாளர்களின் பாதுகாப்பு மற்றூம் நிதி பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், நிர்வாக கட்டமைப்புகள் உருவாக வேண்டும் எனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தீர்ப்பு, கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

அங்கீகாரம் இல்லை கிரிப்டோகரன்சிகளுக்கு, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இதுவரை அங்கீகாரம் வழங்கவில்லை. இறையாண்மை அல்லது சொத்து ஆதரவு இல்லாத கிரிப்டோகரன்சிகளை இந்தியா ஊக்குவிப்பதில்லை என்றும்; விரைவில் இந்தியாவுக்கான டிஜிட்டல் நாணயம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் சில வாரங்களுக்கு முன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.



 இந்தியாவில் 2 கோடி பேர் கிரிப்டோகரன்சியில் வர்த்தகம்  கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்திற்கு 30% வரி








      Dinamalar
      Follow us