UPDATED : டிச 17, 2025 01:47 AM
ADDED : டிச 17, 2025 01:39 AM

இந்தியர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வது கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதாவது, 3,600 கோடி ரூபாய் என்பதிலிருந்து 14,400 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதாக, 'வெஸ்டட் பைனான்ஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
![]() |
அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவின் 145க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து முதலீட்டாளர்கள் உலக சந்தையில் முதலீடு செய்வதாகவும், இதில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மட்டும் 47 சதவீதம் பங்களிப்பை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் முதலீடு செய்பவர்களில் 48 சதவீதம் பேர் 35 வயதுக்கு கீழ் உள்ள இளம் தலைமுறையினர் என்றும், 38 சதவீத முதலீட்டாளர்கள் 45,000 ரூபாய்க்கும் குறைவான தொகையுடன் முதலீட்டை துவக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் முதலீடு செய்பவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள், குறைந்தது ஒரு இ.டி.எப்.,ல் மட்டுமாவது முதலீடு செய்துள்ளனர். சராசரியாக, ஒரு இந்திய முதலீட்டாளர் குறைந்தபட்சமாக எட்டு பங்குகளை வைத்துள்ளார்.
அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


