மருத்துவ காப்பீடு செட்டில்மென்ட் குறைகளை கண்காணித்து நடவடிக்கை: ஐ.ஆர்.டி.ஏ.ஐ., உறுதி
மருத்துவ காப்பீடு செட்டில்மென்ட் குறைகளை கண்காணித்து நடவடிக்கை: ஐ.ஆர்.டி.ஏ.ஐ., உறுதி
UPDATED : நவ 12, 2025 11:42 AM
ADDED : நவ 11, 2025 11:48 PM

மருத்துவ காப்பீடு கிளெய்ம் செட்டில்மென்ட் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் அஜய் சேத் தெரிவித்து உள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: கிளெய்ம்கள் செட்டில்மென்ட் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதேநேரம், வழங்கப்படும் கிளெய்ம் தொகை மிக குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, காப்பீடு நிறுவனங்கள் செட்டில்மென்ட் செய்வதில் நியாயமாகவும், விரைவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். இதை கடைப்பிடிக்காதபட்சத்தில் துறையின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து விடும்.
நம் நாட்டில் காப்பீடு பாலிசி வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மக்கள்தொகைக்கேற்ற அளவை எட்டாமல், காப்பீடு செய்வது தொடர்ந்து குறைவாகவே உள்ளது. எனவே, கிராமப்புறங்கள், முறைசாரா பணியாளர்கள் மற்றும் பெண்களிடையே காப்பீடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

