ஐ.ஆர்.எப்.சி., நிறுவன பங்கு விலை 6 சதவிகிதம் சரிவு
ஐ.ஆர்.எப்.சி., நிறுவன பங்கு விலை 6 சதவிகிதம் சரிவு
ADDED : ஜூன் 25, 2026 04:53 AM

மத்திய அரசு ஐ.ஆர்.எப்.சி., வசம் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்ததை அடுத்து, இதன் பங்கு விலை நேற்றைய வர்த்தக முடிவில் 6.25 சதவீதம் சரிந்து 92.50 ரூபாய்க்கு நிறைவடைந்தது.
பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் நடவடிக்கையின் கீழ், இந்நிறுவனத்தின் ஒரு
சதவீத பங்குகளை 'ஓ.எப்.எஸ்.,' முறையில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
முதலீட்டாளர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் பட்சத்தில், கூடுதலாக ஒரு சதவீத பங்குகளையும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 2 சதவீத பங்குகள் வரை விற்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு விற்பனை வாயிலாக அரசுக்கு 2,300 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான குறைந்தபட்ச விலை ஒரு பங்கிற்கு 91 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் சிறு முதலீட்டாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பங்குகளை வாங்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
