தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/நிழலா நிஜமா? வாகன காப்பீட்டில் தவறான நம்பிக்கைகள்

நிழலா நிஜமா? வாகன காப்பீட்டில் தவறான நம்பிக்கைகள்

நிழலா நிஜமா? வாகன காப்பீட்டில் தவறான நம்பிக்கைகள்

1


UPDATED : ஜூன் 22, 2026 02:49 AM

ADDED : ஜூன் 22, 2026 02:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 22, 2026 02:49 AM ADDED : ஜூன் 22, 2026 02:02 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு காலத்தில் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேரும்போது பரவலாக இருந்த ஒரு நடைமுறை - முதல் தவணை பிரீமியத்தை உங்கள் சார்பாக முகவரே செலுத்தி விடுவார். வாடிக்கையாளரை கவர்வதற்காக வழங்கப்பட்ட இந்த சலுகை சட்டவிரோதமானது. ஆனால், அக்காலத்தில் இது சாதாரண நடைமுறையாகவே இருந்தது.

இந்த பழக்கம் இன்னும் சில இடங்களில் தொடர்ந்து கொண்டிருக்கலாம். இதன் விளைவாக, காப்பீட்டை பற்றிய பல நம்பிக்கைகளும் கதைகளும் உருவாகியுள்ளன.

அவற்றில் ஒன்று, கார் அல்லது இருசக்கர வாகனத்திற்கு ஒரு ஆண்டு காப்பீடு மட்டும் போதும் என்பதாகும். அதுவும் அந்த செலவை வாகன விற்பனையாளரே ஏற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கையும் சேர்ந்து வருகிறது.

மற்றொரு நம்பிக்கை, பழைய வாகனங்களுக்கு காப்பீடு தேவையில்லை அல்லது அவற்றிற்கு காப்பீடு பெற முடியாது என்பதாகும்.

Image 1590602


அப்படியானால், இவை நிழலா? நிஜமா?

உங்கள் காப்பீட்டு திட்டத்தை வாங்குவதற்காக முகவர் அல்லது பிற இடைத்தரகரிடமிருந்து பணம் அல்லது சலுகை பெறுவது இந்திய காப்பீட்டு சட்டங்களின்படி சட்டவிரோதமானது. சிலர் இதை 'ஊக்கத்தொகை' என்று அழைக்கலாம்.

உண்மையில் இது அந்த காப்பீட்டு விற்பனைக்காக முகவருக்கு கிடைக்கும் கமிஷனில் இருந்து பகிர்ந்து வழங்கப்படும் ஒரு பகுதி மட்டுமே.

பெரும்பாலான முகவர்கள் சம்பள அடிப்படையில் வேலை செய்வதில்லை. அவர்களுடைய முக்கிய வருமானம் கமிஷன்தான்.

அதற்கு பதிலாக அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் விற்பனை, புதுப்பித்தல், ஆவணங்கள், பராமரிப்பு ஆகியவற்றில் உதவுவதோடு, தேவையானபோது ஆலோசனையும் வழிகாட்டுதலையும் வழங்குகிறார்கள்.

போட்டி நிறைந்த சூழலில் விற்பனையை பெற வேண்டிய அவசியம் காரணமாக, முகவர் உங்களுக்கு இத்தகைய சலுகை வழங்கக்கூடும்.

ஆனால், அதே நேரத்தில், உங்களுக்கு முழுமையான சேவையை வழங்குவதற்கான அவரது ஆர்வத்தையே நீங்கள் குறைத்து விடக்கூடும்.

குறிப்பாக தனிநபர் முகவர்களின் நிலையில், முதல் பிரீமியத்தை தாங்களே செலுத்துவது அவர்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்.

எனவே, இந்த சலுகையை ஒரு நிழலாகவே கருதுவது உங்கள் நலனுக்கு ஏற்றது.

அடுத்த தவறான நம்பிக்கை, ஒரு ஆண்டு காப்பீடு மட்டும் வாகனத்திற்கு போதுமானது என்பதும், பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு காப்பீடு தேவையில்லை என்பதும் ஆகும்.

பொது சாலைகளில் இயக்கப்படும் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் பொறுப்பு காப்பீடு கட்டாயம் என சட்டம் கூறுகிறது. சாலையில் காவல்துறை வாகனங்களை சோதிக்கும்போது முதலில் சரிபார்ப்பது இதுதான்.

நீங்கள் ஏற்படுத்திய விபத்தில் மற்றொருவரின் வாகனம் சேதமடைந்தால், அவர் உங்கள் மீது சட்டரீதியாக இழப்பீடு கோரலாம். அதேபோல் காயம் அல்லது உயிரிழப்பு தொடர்பான கிளைம்களும் எழலாம்.

இத்தகைய கிளைம்களின் செலவு மிக அதிகமாக இருக்கக்கூடும். சில வழக்குகள் பல ஆண்டுகள் நீதிமன்றங்களில் நீடிக்கலாம்.

மூன்றாம் நபர் பொறுப்பு காப்பீடு இல்லாவிட்டால், வழக்கு செலவுகளையும் இறுதியில் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையையும் உங்கள் சொந்த பணத்தில் இருந்து செலுத்த வேண்டியிருக்கும்.

குறிப்பாக உயிரிழப்பு சம்பவங்களில் இந்த தொகை பல லட்சங்களிலிருந்து கோடிகள் வரை கூட செல்லலாம். அதோடு, நீதிமன்றங்களுக்கும் அலுவலகங்களுக்கும் நீங்கள் நேரடியாக அலைந்து சட்ட நடைமுறைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

ஆனால், இந்த ஒரு காப்பீடு இருந்தாலே, அந்த சுமை அனைத்தையும் உங்கள் காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்கிறது.

எனவே, நிஜத்தை நம்புங்கள். மன நிம்மதிக்காகவும், எளிய பொது அறிவின் அடிப்படையிலும், உங்களையும் உங்கள் வாகனத்தையும் முறையாக காப்பீடு செய்து கொள்ளுங்கள்.

இதனுடன் தொடர்புடைய மற்றொரு காப்பீடு 'சொந்த சேத காப்பீடு' ஆகும். விபத்தினால் வாகனம் சேதமடைந்தால் அதன் பழுதுபார்ப்பு செலவுகளையும், வாகனம் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ அதற்கான இழப்பீட்டை யும் இந்த காப்பீடு வழங்கும்.

இதுவும் மிகவும் புத்திசாலித்தனமான ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகும். ஏனெனில், விபத்தால் ஏற்படும் நிதி இழப்பின் பெரும்பகுதியை இதன் வாயிலாக மீட்டெடுக்க முடியும்.

கடைசியாக ஒரு விஷயம்.

காப்பீட்டு பிரீமியம் செலுத்தும்போது அது பெரியதாகவும் பயமுறுத்துவதாகவும் தோன்றலாம். அது ஒரு நிழல்.

ஆனால், விபத்துக்கு பிறகு ஏற்படும் உண்மையான செலவுதான் நிஜம்.

அந்த நிஜத்திலிருந்து உங்களை பாதுகாக்கும் காப்பீட்டின் அரண்தான் உண்மையான சூப்பர் நிஜம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us