உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 29, 2026 01:16 AM

அ நிறம் | அளவு
'கோட்டக் மஹிந்திரா வங்கி' வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு விதிக்கப்படும் டி.சி.சி., கட்டணத்தை 3.5 சதவீதமாக (+ஜி.எஸ்.டி.,) உயர்த்தியுள்ளது. இது வரும் ஆக., 1ம் தேதி முதல் அமலாகிறது. இதற்கு முன் டி.சி.சி., கட்டணம் 1 சதவீதமாக (+ஜி.எஸ்.டி.,) இருந்தது.
வெளிநாடுகளிலோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களிடமோ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது டி.சி.சி., கட்டணம் வசூலிக்கப்படும். ஏ.டி.எம்., ஸ்டோர்களில் உள்ள 'ஸ்வைப்பிங்' இயந்திரம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு இது பொருந்தும்.
