sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

வெள்ளி இ.டி.எப்., முதலீடுகளை நிறுத்தியது கோட்டக்

/

வெள்ளி இ.டி.எப்., முதலீடுகளை நிறுத்தியது கோட்டக்

வெள்ளி இ.டி.எப்., முதலீடுகளை நிறுத்தியது கோட்டக்

வெள்ளி இ.டி.எப்., முதலீடுகளை நிறுத்தியது கோட்டக்


UPDATED : அக் 11, 2025 01:22 AM

ADDED : அக் 11, 2025 01:18 AM

Google News

UPDATED : அக் 11, 2025 01:22 AM ADDED : அக் 11, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோ ட்டக் மியூச்சுவல் பண்டு நிறுவனம், வெள்ளி இ.டி.எப்., திட்டங்களில் மொத்த முதலீடுகள் மற்றும் சுவிட்ச் இன் முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிறுத்தம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

Image 1480501


இந்திய வெள்ளி சந்தையில் ஏற்பட்டுள்ள தீவிர பற்றாக்குறையால், வெள்ளியின் விலை, சர்வதேச விலையை விட அதிக பிரீமியத்தில் வர்த்தகமாகிறது. முதலீட்டாளர்கள் அதிக பிரீமியத்தில் சந்தையில் நுழைவதிலிருந்து பாதுகாக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்; ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு பிரீமியம் திரும்பியவுடன், மீண்டும் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஏற்கனவே உள்ள எஸ்.ஐ.பி., மற்றும் எஸ்.டி.பி., வாயிலாக முதலீடுகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

Image 1480503


சவால்


* கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும், வெள்ளி இ.டி.எப்., 7.50 முதல் 11.20 சதவிகிதம் வரை, உயர்வு கண்டுள்ளது

* நடப்பாண்டில் இதுவரை வெள்ளி இ.டி.எப்., 86 சதவிகிதம் அளவுக்கு உயர்வு

* சர்வதேச சந்தையில், நேற்று வெள்ளி விலை 2.60 சதவீதம் உயர்வு கண்டு, ஒரு அவுன்ஸ் 51.30 அமெரிக்க டாலரை தாண்டி உள்ளது

* ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை, 50 அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகமானது 1980க்கு பிறகு இதுவே முதல்முறை

* சர்வதேச அளவில் தேவை அதிகரித்து வரும் நிலையில், கையிருப்பு அடிப்படையில், புதிய வெள்ளி இ.டி.எப்., உருவாக்குவது சவாலாக இருப்பதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us