உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 20, 2026 01:58 AM

அ நிறம் | அளவு
'எல் .ஐ.சி.,' நிறுவன பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 5 சதவீதம் வரை உயர்ந்து, 450 ரூபாய் என்ற 4 மாத கால உச்சத்தை தொட்டன.
தொடர்ந்து 6வது வர்த்தக நாளாக ஏறுமுகத்தில் இருக்கும் எல்.ஐ.சி., பங்குகள், இந்த குறுகிய காலத்தில் 15 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளன. கடந்த ஏப்., 2ம் தேதி பதிவான 52 வார குறைந்தபட்ச விலையான 361 ரூபாயிலிருந்து தற்போது 25 சதவீதம் வரை மீண்டு எழுந்துள்ளது. நேற்று நாளின் இறுதியில் இந்நிறுவன பங்கு விலை 440.15 ரூபாயாக நிலைபெற்றது. ஐ.பி.ஓ., வெளியீட்டிற்காக செபியிடம், என்.எஸ்.இ., வரைவு அறிக்கையை சமர்பித்துள்ளதும், எல்.ஐ.சி., நிறுவன பங்கு விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம்.
