முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மிட், ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மிட், ஸ்மால் கேப் மியூச்சுவல் பண்டுகள்
ADDED : ஆக 25, 2026 12:13 AM

மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் பார்வை, மிட் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்களின் பக்கம் பெருமளவில் திரும்பியுள்ளது.
2020 - 2021ம் நிதியாண்டில், புதிய போலியோ சேர்க்கையில், இவற்றின் பங்கு 2.91 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், புதிதாக இணைந்த முதலீட்டாளர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இப்பிரிவுகளையே தேர்வு செய்துள்ளனர் என, ஆம்பியின் ஆய்வறிக்கை சொல்கிறது.
அதில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜூலை 2026ல் ஈக்விட்டி பண்டுகளுக்கு வந்த மொத்த முதலீட்டில், 56 சதவீதம் மிட் மற்றும் ஸ்மால் கேப் பண்டுகளுக்கே சென்றுள்ளது. 2023ம் ஆண்டிற்கு பின், மொத்த ஈக்விட்டி முதலீட்டில் பாதியை தாண்டுவது இதுவே முதன்முறை.
நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் 'பி.எஸ்.இ., மிட்கேப் இன்டெக்ஸ்' 20 சதவீதமும், 'பி.எஸ்.இ., ஸ்மால்கேப் இன்டெக்ஸ்' 30 சதவீதமும் உயர்ந்துள்ளன. ஆனால், சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை 8.50 முதல் 9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
