ADDED : பிப் 20, 2026 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போன்பே' நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இனி ஒவ்வொரு முறை யு.பி.ஐ., வாயிலாக பணம் அனுப்பும்போதும், பின் நம்பரை உள்ளிட வேண்டியதில்லை. மொபைலில் உள்ள 'பிங்கர் பிரிண்ட்' அல்லது 'பேஸ் அன்லாக்' வாயிலாக பணத்தை அனுப்பலாம்.
வெளிச்சம் குறைவு அல்லது சென்சார் கோளாறு காரணமாக, 'பயோமெட்ரிக்' வேலை செய்யவில்லை என்றால், உடனடியாக பின் நம்பரை பயன்படுத்தி பணத்தை அனுப்பலாம். இந்த வசதி அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே.
தற்போது இந்த வசதி 'ஆண்ட்ராய்டு' போன் பயன்படுத்துபவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் 'ஐபோன்' பயனாளர்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

