sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் எளிதாக பெற வாய்ப்பு

/

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் எளிதாக பெற வாய்ப்பு

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் எளிதாக பெற வாய்ப்பு

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் எளிதாக பெற வாய்ப்பு


UPDATED : செப் 15, 2025 01:06 AM

ADDED : செப் 15, 2025 01:04 AM

Google News

UPDATED : செப் 15, 2025 01:06 AM ADDED : செப் 15, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ ன்ஷன் மற்றும் பென்ஷன் பெறுவோர் நலத்துறை நாடு முழுதும் 1,600 இடங்களில் 'டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பிரசாரம் 4.0'-வை நவம்பர் மாதத்திலிருந்து துவங்க உள்ளது.

டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் என்பது, பென்ஷன் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவும்; பென்ஷனை தொடர்ந்து பெறவும் சமர்ப்பிக்கும் பாரம்பரிய வாழ்நாள் சான்றிதழின் டிஜிட்டல் வடிவம் ஆகும்.

முக்கிய அம்சங்கள்


கால அளவு: நவம்பர் 1 முதல் 30 வரை.

இடம்: இந்தியா முழுதும் உள்ள 1,600 மாவட்டங்கள் மற்றும் துணைப் பிரிவு தலைமையகங்கள்.

நோக்கம்: பென்ஷன் பெறுபவர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் எளிதாகச் சமர்ப்பிக்க உதவுவது.

சேவைகள்: வங்கிகள் மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் கிளைகள் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே சமர்ப்பிக்கலாம்.

மிக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சேவை வழங்கப்படும்.

முகாம்கள்: பென்ஷன் வழங்கும் வங்கிகள், பென்ஷன் பெறுவோர் நலச் சங்கங்களின் ஆதரவுடன் முகாம்கள் நடத்தப்படும்.

விழிப்புணர்வு: அக்டோபர் மாதத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இலக்கு: 2 கோடி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களைப் பெறுவது.

கண்காணிப்பு: அனைத்து சமர்ப்பிப்புகளும் 'டி.எல்.சி., - என்.ஐ.சி., போர்ட்டல் வாயிலாக நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும்.

கூடுதல் வசதி: 80 வயதுக்கு மேற்பட்ட பென்ஷன்தாரர்கள் அக்டோபர் மாதத்திலேயே சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us