பேமென்ட் அக்ரிகேட்டர் 'கிரெட்' நிறுவனத்துக்கு அனுமதி
பேமென்ட் அக்ரிகேட்டர் 'கிரெட்' நிறுவனத்துக்கு அனுமதி
ADDED : மார் 12, 2026 01:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'கி ரெட்' நிறுவனம், இனி ஆன்லைன் வர்த்தகர்களுக்கு பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கும் 'பேமென்ட் அக்ரிகேட்டர்' ஆக செயல்பட, இந்திய ரிசர்வ் வங்கி
இறுதி ஒப்புதலை அளித்துள்ளது.
'பேமெண்ட் அக்ரிகேட்டர்' என்பது வாடிக்கையாளர்களிடமிருந்து யூ.பி.ஐ., கார்டுகள், நெட் பேங்கிங் முறையில் பணத்தைப் பெற்று, அதை வணிகர்களுக்கு பாதுகாப்பாக வழங்கும் ஒரு இடைத்தரகு சேவை ஆகும். கடந்த 2024--25ம் நிதியாண்டில் கிரெட் தளம் வழியாக கிட்டத்தட்ட 8.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்தியாவில் செலுத்தப்படும் மொத்த கிரெடிட் கார்டு பில்களில் மூன்றில் ஒரு பங்கு கிரெட் செயலி வாயிலாகவே செலுத்தப்படுகிறது.

