ADDED : பிப் 19, 2026 01:50 AM
' பார்தி ஏர்டெல் ' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'ஏர்டெல் மனி' வங்கி சாராத நிதி நிறுவனமாக செயல்பட ஆர்.பி.ஐ., ஒப்புதலை பெற்றுள்ளது.
இது குறித்து பார்தி ஏர்டெல் தேசிய பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில், 'பொதுமக்களிடம் இருந்து டிபாசிட் பெறாத நிதி நிறுவனமாக செயல்பட ஆர்.பி.ஐ., அனுமதி அளித்துள்ளது.
'புதிய நிறுவனத்தின் நிதிநிலை தொடர்பாக, எந்தவொரு உத்தரவாதம் அல்லது பொறுப்பை ஆர்.பி.ஐ., ஏற்காது' என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு சந்தையில் எழுந்துள்ளது.
ஆனாலும், நேற்று பார்தி ஏர்டெல் பங்குகள் பெரியளவில் ஏற்ற, இறக்கமின்றி நிலையான வரம்புக்குள் வர்த்தகமானது.
வர்த்தக நேர முடிவில் வெறும் 0.06 சதவீதம் உயர்வுடன், பங்கு விலை 2,021.60 ரூபாயாக இருந்தது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11.53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

