பங்கு வெளியீட்டால் என்.எஸ்.இ.,மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும்
பங்கு வெளியீட்டால் என்.எஸ்.இ.,மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும்
ADDED : ஜூன் 29, 2026 01:28 AM

'என்.எஸ்.இ.,' பங்கு வெளியீட்டால் அதன் நிறுவன மதிப்பு கிட்டத்தட்ட 5 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று 'சென்ட்ரம் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச்' நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
என்.எஸ்.இ.,க்கு பங்கு வர்த்தகத்தில் 93 சதவீத சந்தை பங்கு உள்ளது
ஈக்விட்டி பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 100 சதவீத பங்கு உள்ளது
ஈக்விட்டி இண்டெக்ஸ் ஆப்ஷன் வர்த்தகத்தில் 72 சதவீத பங்கு உள்ளது
கரன்சி டெரிவேட்டிவ்களில் கிட்டத்தட்ட ஏகபோக உரிமை கொண்டுள்ளது
கார்ப்பரேட் கடன் பத்திர வர்த்தகத்திலும் ஆதிக்கம் செலுத்துகிறது
நிறுவனமாக அதிக லாப விகிதமும், அதிக 'ரிட்டன் ஆன் ஈக்விட்டி'யும் கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட 12.90 கோடிக்கு மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட முதலீட்டாளர்களுக்கு சேவை வழங்குகிறது
இந்திய குடும்பங்கள் 'பிசிக்கல்' சொத்துக்களில் இருந்து நிதி சொத்துக்களுக்கு மாறி வருவதால், என்.எஸ்.இ.,க்கு முதலீட்டாளர்கள் அதிக மதிப்பை கொடுக்க தயாராக இருப்பார்கள்
ஆனால் என்.எஸ்.இ.,யின் வருவாயில் 80 சதவீதம், வர்த்தக செயல்பாடுகள் வாயிலாகவே கிடைக்கின்றன
செயல்பாட்டு வருவாயில் 60 சதவீதம் ஆப்ஷன் வர்த்தகம் மற்றும் 9 சதவீதம் பியூச்சர்ஸ் வர்த்தகம் வாயிலாக கிடைக்கிறது
டெரிவேட்டிவ் வர்த்தகம் குறைந்தால் அது என்.எஸ்.இ., யை பாதிக்கும் என்பதையும் முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
