திடீர் 'பல்டி' அடித்த பங்கு சந்தை 400 புள்ளிகள் சரிந்த 'சென்செக்ஸ்'
திடீர் 'பல்டி' அடித்த பங்கு சந்தை 400 புள்ளிகள் சரிந்த 'சென்செக்ஸ்'
ADDED : ஏப் 29, 2026 12:30 AM

தொடர் மூன்று நாள் சரிவிலிருந்து ஓரளவு மீண்டெழுந்த பங்கு சந்தை, நேற்று திடீர் 'பல்டி' அடித்து, மீண்டும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் அதன் நேற்றைய உச்சத்திலிருந்து கிட்டத்தட்ட 600 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 416 புள்ளிகள் சரிந்து, 76,887 புள்ளிகளிலும், நிப்டி 97 புள்ளிகள் சரிந்து 23,996 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நிப்டி 24,200 புள்ளிகளை கடந்தால் மட்டுமே மீண்டும் வலுவான முன்னேற்றத்தை காண முடியும்; இல்லையெனில் 23,500 புள்ளிகள் வரை சரிவதற்கான வாய்ப்புகளே அதிகம் என பங்கு சந்தை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சரிவுக்கான முக்கிய காரணங்கள்
முதலீட்டாளர்கள் நிதி மற்றும் ஐ.டி., துறை பங்குகளை அதிக அளவு விற்று லாபம் ஈட்டியது
நிப்டி ஒப்பந்தங்கள் காலாவதியாவதால் ஏற்பட்ட கூடுதல் ஏற்ற இறக்கங்கள்
ஈரான் முன்வைத்த அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்க வாய்ப்பில்லை என்கிற தகவல்
பொதுத்துறை வங்கிகளுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய இ.சி.எல்., விதிமுறைகள் குறித்த செய்தி
சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 111 டாலராக உயர்ந்ததால், உருவான பணவீக்க அச்சம்
அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம். நேற்று மட்டும் 1,151 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்
ஜப்பான், சீனாவின் சந்தைகள் சரிவுடன் காணப்பட்டது, இந்திய சந்தையிலும் எதிரொலித்தது.
