sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

சேமிப்பு திட்டம்

/

சென்னையில் இருந்து 5,900 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்காக இயக்கும் போக்குவரத்து கழகம்

/

சென்னையில் இருந்து 5,900 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்காக இயக்கும் போக்குவரத்து கழகம்

சென்னையில் இருந்து 5,900 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்காக இயக்கும் போக்குவரத்து கழகம்

சென்னையில் இருந்து 5,900 சிறப்பு பேருந்துகள் தீபாவளிக்காக இயக்கும் போக்குவரத்து கழகம்


ADDED : அக் 07, 2025 12:36 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ''தீபாவளி பண்டிகையொட்டி, சென்னையில் இருந்து வழக்கமாக செல்லும் பேருந்துகளோடு 5,900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

இது குறித்து அவர், தலைமை செயலகத்தில் நேற் று அளித்த பேட்டி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 16 முதல் 19ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,900 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்களுக்கும் சேர்த்து 14,268 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

நெரிசலை தவி ர்க்க கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து, அவை இயக்கப்படும்.

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல இதுவரை, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் இயக்கம் அறியவும், புகார் தெரிவிக்கவும் ஏதுவாக, 94450 14436 என்ற எண்ணை அழைக்கலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044 - 2474 9002, 2628 0445 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்

எந்த நிலையங்களில் இருந்து

எங்கெல்லாம் பஸ்கள் இயக்கம்

கிளாம்பாக்கம்: புதுச்சேரி, கடலுார், சிதம்பரம், திருச்சி, மதுரை, துாத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோவை, கும்பகோணம், தஞ்சாவூர், வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை. கோயம்பேடு: கிழக்கு கடற்கரை, காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, திருத்தணி மாதவரம்: திருச்சி, சேலம், கும்பகோணம், திருவண்ணாமலை மற்றும் பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக செல்லும் ஆந்திர மாநில பேருந்துகள். கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்துார் வழியாக செல்வதை தவிர்த்து பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலுார் வெளிச்சுற்று சாலை, கேளம்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு சாலை வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது.






      Dinamalar
      Follow us