/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஐ.பி.ஓ., வந்ததோ ரூ.12 கோடிக்கு; வரவேற்போ ரூ.4,800 கோடிக்கு!
/
ஐ.பி.ஓ., வந்ததோ ரூ.12 கோடிக்கு; வரவேற்போ ரூ.4,800 கோடிக்கு!
ஐ.பி.ஓ., வந்ததோ ரூ.12 கோடிக்கு; வரவேற்போ ரூ.4,800 கோடிக்கு!
ஐ.பி.ஓ., வந்ததோ ரூ.12 கோடிக்கு; வரவேற்போ ரூ.4,800 கோடிக்கு!
ADDED : ஆக 28, 2024 02:52 AM

புதுடில்லி: பங்குச் சந்தையில் 12 கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியிட்ட, எட்டு தொழிலாளர்களை மட்டுமே கொண்ட வாகன டீலர் நிறுவனத்தில், 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய விண்ணப்பங்கள் குவிந்தது, பங்கு சந்தை நிபுணர்களையே திகைக்கச் செய்துள்ளது.
தொழில் விரிவாக்கத்துக்காக, புதிய பங்கு வெளியீடு வாயிலாக 12 கோடி ரூபாய் திரட்ட, டில்லியைச் சேர்ந்த இருசக்கர வாகன டீலரான 'சாஹ்னி ஆட்டோமொபைல்', விண்ணப்பித்து இருந்தது.
இந்நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு ஷோரூம்களில் தற்போது எட்டு தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
'ரிசோர்ஸ்புல் ஆட்டோமொபைல்' என்ற பெயரிலான இதன் பங்கு வெளியீட்டில், 10.25 லட்சம் பங்குகளை, பங்கு ஒன்றின் விலை 117 ரூபாய் என நிர்ணயித்து, விற்பனை செய்ய இந்நிறுவனம் முன்வந்தது.
ஆக., 22ல் துவங்கி 26ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்தது. பங்குகளை வாங்க, மொத்தம் 419 மடங்கு அதிகமான விண்ணப்பங்கள், அதாவது 4,800 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறிய நடுத்தர நிறுவனம் ஒன்றின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, வழக்கத்தில் இல்லாத வகையில் அதிக விண்ணப்பங்கள் குவிந்தது, பங்குச் சந்தை வணிகர்களை பிரமிக்க செய்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டை நடத்தும் வங்கியினரும், முதலீட்டாளர்களின் எதிர்பாராத இந்த ஆர்வம் குறித்து விளக்க முடியாமல் திகைத்தனர்.
சிறு, குறு, நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டிற்கு, இப்படி எதிர்பாராத அளவுக்கு விண்ணப்பங்கள் குவிந்தது இதுவே முதல்முறையாகும்.