/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பொதுத்துறை பங்குகள் 999% அதிகரிப்பு
/
பொதுத்துறை பங்குகள் 999% அதிகரிப்பு
ADDED : ஜன 31, 2024 12:45 AM

மும்பை:பொதுத்துறை நிறுவன பங்குகளின் விலை, கடந்த மூன்று ஆண்டுகளில் 999 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக 'மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ்' நிறுவனத்தின் பங்குகள், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், தற்போது வரையிலான காலத்தில் 999 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 'ஆர்.வி.என்.எல்., ஐ.ஆர்.எப்.சி., ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பெல்' ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை, இதே காலகட்டத்தில், 500 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்வை சந்தித்துள்ளன.
'எஸ்.ஜே.வி.என்., பி.எப்.சி., ஆர்.இ.சி.,' ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியையும்; 'ஓ.என்.ஜி.சி., பவர் கிரிட்' நிறுவனங்களின் பங்குகள் 140 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.