/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மீண்டு(ம்) எழுச்சி கண்ட சந்தை
/
மீண்டு(ம்) எழுச்சி கண்ட சந்தை
ADDED : அக் 08, 2024 11:38 PM

ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாகிறது. வட்டி விகிதம் மாற்றம் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக, வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் உயர்வுடன் நிறைவடைந்தன
• வர்த்தகத்தின் ஆரம்பத்தில் பங்குச் சந்தை குறியீடுகள், திசையறியாத நிலையில் துவங்கின. ஆனால், எச்.டி.எப்.சி வங்கி, ரிலையன்ஸ் மற்றும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு அதிகரித்ததால், பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன
• நிப்டி 50 குறியீட்டில், உலோகத்துறை பங்குகள் தவிர்த்து, அனைத்து துறை பங்குகளும் உயர்வுடன் முடிவடைந்தன. தொடர்ச்சியாக, ஆறு நாட்கள் வீழ்ச்சி கண்ட குறியீடுகள்,
ஒரு சதவீதம் ஏற்றத்துடன் நிறைவு செய்தன
• தொடர்ச்சியாக பங்குகளை விற்று வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு நடவடிக்கை தொடர வாய்ப்புள்ளதால், மீண்டும் பங்குகளை வாங்க துவங்கி இருப்பதாக, சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று, ------5,730 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.84 சதவீதம் சரிந்து, 79.44 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா அதிகரித்து, 83.97 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
டிரென்ட்
பெல்
அதானி என்டர்பிரைசஸ்
அதானி போர்ட்ஸ்
மஹிந்திரா & மஹிந்திரா
அதிக இறக்கம் கண்டவை
எஸ்.பி.ஐ.,லைப்
டாடா ஸ்டீல்
டைட்டன்
பஜாஜ் பின்சர்வ்
ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல்