ADDED : டிச 28, 2024 12:57 AM

• வாரத்தின் இறுதி வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் குறியீடுகள் கணிசமான ஏற்றத்துடன் நிறைவடைந்தன
• வங்கி, வாகன துறை பங்குகள் மீது முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். எனினும், அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் வெளியேற்றம், ரூபாயின் வரலாறு காணாத சரிவு காரணமாக, பிற துறை பங்குகளில் எச்சரிக்கையை வெளிப்படுத்தினர்
• இம்மாத வாகன விற்பனை மீண்டெழும் என்ற நம்பிக்கையாலும், அவற்றின் பங்கு விலை நிலவரத்தாலும் இப்பிரிவில் கூடுதல் முதலீடு மேற்கொள்ளப்பட்டது
• துறை வாரியான செயல்பாடுகளை பொறுத்தவரை, மும்பை பங்குச் சந்தையில் வாகனத்துறை 0.86 சதவீதமும்; சுகாதாரத்துறை 0.79 சதவீதமும் அதிகரித்தன. உலோகம் 1.19 சதவீதமும்; எண்ணெய் மற்றும் எரிவாயு 0.94 சதவீதமும் சரிவடைந்தன
• ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட இந்த வாரத்தில், சென்செக்ஸ் 657.48 புள்ளிகளும்; நிப்டி 225.90 புள்ளிகளும் அதிகரித்துள்ளன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,323 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.18 சதவீதம் அதிகரித்து, 73.39 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 85.48 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
டாக்டர் ரெட்டி
இண்டஸ்இண்ட் பேங்க்
மஹிந்திரா & மஹிந்திரா
டாடா மோட்டார்ஸ்
எய்ச்சர் மோட்டார்ஸ்
அதிக இறக்கம் கண்டவை
ஹிண்டால்கோ
எஸ்.பி.ஐ.,
கோல் இந்தியா
ஓ.என்.ஜி.சி.,
பெல்

