
• வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், உயர்வுடன் நிறைவடைந்தன
• அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய சந்தையில் முதலீட்டை துவங்கி இருப்பதால்,நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின
• தொடர்ந்து, அமெரிக்க நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அதானி கிரீன் எனர்ஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, அதானி பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், சந்தை குறியீடுகள் நல்ல ஏற்றத்தை கண்டது
• நிப்டி குறியீட்டில் மருந்து, ரியல் எஸ்டேட் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தவிர, அனைத்து துறை சார்ந்த பங்குகளும் உயர்வு கண்டன. குறிப்பாக, எனர்ஜி துறை பங்குகளை கொண்ட குறியீடு, 1.5 சதவீதம் அளவுக்கு உயர்வு கண்டது
• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள 21 துறைகளில், 18 துறைகள் சார்ந்த பங்குகள் உயர்ந்தும்; 3 துறைகள் சார்ந்த பங்குகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று--- 8 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.63 சதவீதம் அதிகரித்து, 73.23 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா சரிந்து, 84.44 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
அதானி என்டர்பிரைசஸ்
அதானி போர்ட்ஸ்
பெல்
டிரென்ட்
என்.டி.பி.சி.,
அதிக இறக்கம் கண்டவை
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்
டைட்டன்
விப்ரோ
ஸ்ரீராம் பைனான்ஸ்
ஹிண்டால்கோ