/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'ஸ்டார்ட் அப்' நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
/
'ஸ்டார்ட் அப்' நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
'ஸ்டார்ட் அப்' நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
'ஸ்டார்ட் அப்' நிதியுதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம்
UPDATED : ஜன 11, 2026 09:06 AM
ADDED : ஜன 11, 2026 01:15 AM

சென்னை: தமிழகத்தில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களில், துவக்க நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு, புத்தொழில் ஆதார நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்குகிறது.
பெண்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி வழங்குவதற்கு, நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் பெறும் பணி டிச., முதல் வாரத்தில் துவங்கியது. அம்மாதம் கடைசி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜன., 10 வரை நீட்டிக்கப்பட்டது.
தற்போது இம்மாதம், 30ம் தேதி வரை அவகாசத்தை ஸ்டார்ட் அப் டி.என்., நீட்டித்துள்ளது. இதற்கு, https://startuptn.in/ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

