/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'செயற்கை இழை நுாலுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்கணும்'
/
'செயற்கை இழை நுாலுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்கணும்'
ADDED : ஆக 21, 2025 11:58 PM

பல்லடம்:'செயற்கை இழை நுாலுக்கான ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும்' என, தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இதன் செயலர் வேலுசாமி கூறியதாவது:
ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட்டபோது, செயற்கை இழை நுாலுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது; பின், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.
செயற்கை இழைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் துணிகளை விற்பனை செய்யும்போது, 5 சதவீத விற்பனை வரி வசூலிக்கப்படுகிறது. நுாலுக்காக செலுத்தப்படும் 12 சதவீத வரி போக, மீதமுள்ள 7 சதவீதம் கணக்கில் தேங்குகிறது.
இதை திரும்ப பெற, சில மாதங்கள் ஆவதால், வருவாய் பாதிக்கப்படுகிறது. தொழிலுக்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள், ஜி.எஸ்.டி.,யாக தேங்குகின்றன. அதிகப்படியான கடன்கள் பெற்று தான் நுால் வாங்குகிறோம். எனவே, செயற்கை இழை நுாலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.