/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பணவீக்கமும் சேர்ந்து கொண்டது
/
பணவீக்கமும் சேர்ந்து கொண்டது
ADDED : நவ 14, 2024 11:28 PM

•வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் லேசான இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக வாராந்திர அடிப்படையில், இரண்டாவது வாரமாக, சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. நிப்டி 2.55 சதவீதமும்; சென்செக்ஸ் 2.40 சதவீதமும் இறக்கம் கண்டன.
• நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோது, சந்தை குறியீடுகள் ஏற்றத்துடன் துவங்கின. அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவது, உற்சாகம் இழக்கச் செய்த நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போது பணவீக்கம் அதிகரிப்பால், பிற்பகலில் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்பனை செய்தனர்.
• நிப்டி குறியீட்டில், பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, நுகர்வோர் பொருட்கள் சார்ந்த குறியீடு, 1.53 சதவீதம் சரிவை கண்டது. மும்பை பங்குச் சந்தையில் 2,160 நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும்; 1,798 நிறுவனங்களின் பங்குகள் இறக்கத்துடனும்; 92 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.
• குருநானக் ஜெயந்தியை ஒட்டி, இந்திய பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 1,850 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 0.06 சதவீதம் குறைந்து, 1 பேரலுக்கு 72.24 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று 7 பைசா சரிந்து, 84.46 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
ஐச்சர் மோட்டார்ஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
கிராசிம்
கோட்டக் வங்கி
எச்.டி.எப்.சி., லைப்
அதிக இறக்கம் கண்டவை
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
பி.பி.சி.எல்.,
பிரிட்டானியா
டாடா கன்ஸ்யூமர்
நெஸ்லே இந்தியா