/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
எழுச்சியுடன் துவங்கி சரிவில் முடிந்தது
/
எழுச்சியுடன் துவங்கி சரிவில் முடிந்தது
ADDED : அக் 25, 2024 01:46 AM

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. தொடர்ச்சி யாக, மூன்றாவது நாளாக சந்தை குறியீடுகள் சரிவைக்
கண்டுள்ளன
• உலகளாவிய சந்தை போக்குகளுக்கு மாறாக, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் ஆரம்பத்தில் எழுச்சியுடன் துவங்கின. ஆனால், பல நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் கைகொடுக்காததால், முதலீட்டாளர்கள் உற்சாகம் இழந்தனர்
• நிப்டி குறியீட்டை பொறுத்தவரை, அதிகபட்சமாக வங்கிகள் சார்ந்த பங்குகள் விலை உயர்வு கண்டன. மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவை கண்ட நுகர்வோர் பொருட்கள் குறியீடு, 2.83 சதவீதம் இறக்கம் கண்டது
• 'தொடர்ச்சியாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறுவது ஒருபுறமிருக்க, இந்திய சந்தையின் வளர்ச்சி, வருவாயுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருப்பதாகவும்; ஒவ்வொரு முறை சந்தை உயர்வை காணும்போதும், பங்குகளை விற்பனை செய்யும் போக்கு நீடிக்கிறது' என்றும், பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று ---5,062 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்பனை செய்திருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.99 சதவீதம் அதிகரித்து, 76.45 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, மாற்றமின்றி 84.07 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
அல்ட்ராடெக் சிமென்ட்
ஸ்ரீராம் பைனான்ஸ்
மஹிந்திரா & மஹிந்திரா
டைட்டன்
கிராசிம்
அதிக இறக்கம் கண்டவை
ஹிந்துஸ்தான் யுனிலீவர்
எஸ்.பி.ஐ., லைப்
ஹிண்டல்கோ
நெஸ்லே இந்தியா
பஜாஜ் ஆட்டோ