/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'நிப்டி 50' குறியீட்டுக்கு வயது 30
/
'நிப்டி 50' குறியீட்டுக்கு வயது 30
UPDATED : மார் 11, 2026 02:07 AM
ADDED : மார் 11, 2026 01:52 AM

இ ந்தியாவின் முதன்மையான பங்குச் சந்தை குறியீடும், உலக அளவில் பரவலாக கவனிக்கப்படும் குறியீடுகளில் ஒன்றுமான 'நிப்டி 50' குறியீடு, தனது 30 ஆண்டுகால பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இதை முன்னிட்டு நேற்று மும்பையில் உள்ள தேசிய பங்குச்சந்தையின் தலைமையகத்தில் பிரமாண்ட கொண்டாட்டங்கள் நடை பெற்றன.
இதற்கான விழாவில், செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே மற்றும் ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குருமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, 'நிப்டி பனோரமா' என்ற புத்தகத்தை வெளியிட்டனர். அப்போது பேசிய துஹின் காந்தா பாண்டே, ''நிப்டி என்பது வெறும் குறியீடு மட்டுமல்ல; அது, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் முன்னேற்றத்தைக் காட்டும் ஒரு கருவி'' என தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டுகளில், நிப்டி 50 ஒரு பெஞ்ச்மார்க்காக மட்டுமின்றி, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் நம்பிக்கையாகவும் உருவெடுத்துள்ளது என, தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான் தெரிவித்தார்.

