ADDED : ஜன 04, 2025 12:21 AM

• வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இதன் வாயிலாக, கடந்த இரண்டு நாட்களில் பதிவான நிப்டி, சென்செக்ஸ் உயர்வுக்கு தடை ஏற்பட்டது. எனினும், வார அடிப்படையில், இரண்டாவது வாரமாக சந்தை குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன
• வரும் வாரத்தில் நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக வங்கி மற்றும் ஐ.டி., துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றதால், சந்தை குறியீடுகள் இறக்கத்தில் முடிந்தன
• நிப்டியில், தகவல் தொழில்நுட்பம், மருந்து, வங்கி, நிதித்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள், 1 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டன. அதே நேரம், ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகள் 1 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன
• மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங் களில் 2,105 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 1,876 நிறுவன பங்குகள் குறைந்தும்; 122 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 4,227 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றிருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.43 சதவீதம் குறைந்து, 75.60 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்து, 85.79 ரூபாயாக இருந்தது.
டாப் 5 நிப்டி 50 பங்குகள்
அதிக ஏற்றம் கண்டவை
ஓ.என்.ஜி.சி.,
டாடா மோட்டார்ஸ்
எஸ்.பி.ஐ.,லைப்
டைட்டன்
நெஸ்லே இந்தியா
அதிக இறக்கம் கண்டவை
விப்ரோ
எச்.டி.எப்.சி.,பேங்க்
அதானி போர்ட்ஸ்
டெக் மஹிந்திரா
சிப்லா