sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

குஜராத் மாடலில் உப்பு உற்பத்தி அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை

/

குஜராத் மாடலில் உப்பு உற்பத்தி அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை

குஜராத் மாடலில் உப்பு உற்பத்தி அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை

குஜராத் மாடலில் உப்பு உற்பத்தி அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை

6


ADDED : பிப் 01, 2025 01:43 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:43 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி:''குஜராத் மாநிலத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போல, மழைக்காலங்களில் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, தமிழகத்தில் உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்,'' என, அமைச்சர் கீதா ஜீவன் பேசினார்.

தமிழகத்தில் உப்பு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான தொழிநுட்ப கருத்தரங்கம், துாத்துக்குடியில் தமிழ்நாடு உப்பு கழக நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தலைமையில் நடந்தது.சமூக நலன், மகளிர் உரிமை துறைஅமைச்சர் கீதா ஜீவன், கருத்தரங்கை துவக்கி வைத்துபேசியதாவது:

உப்பு உற்பத்தியில் குஜராத் முதலிடத்திலும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்திலும் உள்ளன. மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகம் இரண்டாமிடம் வருவதற்கு உப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.துாத்துக்குடி மாவட்டத்தில் ஒரு நாள் மழை பெய்தாலே, 10 நாட்கள் உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.குஜராத் மாநிலத்தில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் போல, மழைக்காலங்களில் இங்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்.

இளம் தொழில்முனைவோரை உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபடுத்த வேண்டும்.உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகை, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த வகையில், 32,000 தொழிலாளர்களுக்கு, 16 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உப்பளத் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைத்துள்ளோம்.இவ்வாறு அவர்பேசினார்.






      Dinamalar
      Follow us