
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 227 புள்ளிகள் உயர்ந்து, 78,699 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 63 புள்ளிகள் உயர்ந்து, 23,813 புள்ளிகளாக இருந்தது. பி.எஸ்.இ., ஸ்மால்கேப் குறியீடு லேசான ஏறுமுகத்துடன் முடிந்த நிலையில், மிட்கேப் குறியீடு இறங்குமுகத்துடன் முடிந்தது.
வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் போக்கு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறை கொண்டிருந்தனர். ஆட்டோ மற்றும் வங்கி துறை பங்குகள் ஏற்றம் கண்டன. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.