
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்கு முகத்துடன் முடிந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவு கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 241 புள்ளிகள் குறைந்து, 77,379 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 95 புள்ளிகள் குறைந்து, 23,432 புள்ளிகளாக இருந்தது.
சர்வதேச சந்தையின் பலவீனமான காரணிகள், பொருளாதார வளர்ச்சி தொடர்பான கலவை உள்ளிட்ட அம்சங்கள் தாக்கம் செலுத்தின. வினியோக சங்கிலி தாக்கத்தால் அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலையும் தாக்கம் செலுத்தியது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறையை கையாண்டனர்.