
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து இரண்டு நாள் ஏறுமுகத்திற்கு பின், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 330 புள்ளிகள் குறைந்து, 76,190 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 113 புள்ளிகள் குறைந்து, 23,092 புள்ளியாக இருந்தது.
சர்வதேச சந்தையில் நிலவிய கலவையான போக்கிற்கு மத்தியில், முதலீட்டாளர்கள் ரியாலிட்டி, எண்ணெய், எரிபொருள், சுகாதார நலன் உள்ளிட்ட பங்குகளை தவிர்த்தனர். வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள், பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.

