
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச் சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து நான்கு நாள் ஏறுமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 741 புள்ளிகள் உயர்ந்து, 77,501 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிப்டி, 259 புள்ளிகள் உயர்ந்து, 23,508 புள்ளிகளாக இருந்தது.
பட்ஜெட் வளர்ச்சிக்கு ஆதரவாக அமையும் என பொருளாதார ஆய்வறிக்கை கணிப்பு, சந்தையில் தாக்கம் செலுத்தியது. நிதிநிலை முடிவுகளும் வலு சேர்த்தன. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.