
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் லேசான இறங்கு முகத்துடன் முடிந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இறங்குமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 198 புள்ளிகள் குறைந்து, 77,860 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி, 43 புள்ளிகள் குறைந்து, 23,560 புள்ளிகளாக இருந்தது.
ரிசர்வ் வங்கி அறிவித்த ரெப்போ வட்டி விகித குறைப்பு பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மேலும், முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் போக்கில் ஈடுபட்டனர். வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.