/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை நிலவரம்: ஒப்பந்தம் தந்த ஏற்றம்
/
பங்கு சந்தை நிலவரம்: ஒப்பந்தம் தந்த ஏற்றம்
UPDATED : ஜூலை 24, 2025 07:31 AM
ADDED : ஜூலை 24, 2025 12:00 AM

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள்
ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஜப்பான் பொருட்கள் இறக்குமதிக்கு 15 சதவீதம் வரி
விதிப்பதாக அமெரிக்கா அறிவித்தது, இரு நாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம்
தொடர்பான அறிவிப்பை தொடர்ந்து, ஆசிய பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டன.
இதன் தொடர்ச்சியாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, இந்திய பங்குச்சந்தை
குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஒருபுறம்
இருப்பினும், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் கைகொடுக்கவே முன்னணி
நிறுவனங்களின் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் வாங்கினர்.
இதனால், நாள் முழுதும் சந்தை குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
முடிவில், நிப்டி, சென்செக்ஸ் 0.69 சதவீதம் உயர்வுடன் நிறைவடைந்தன.
உலக சந்தைகள்
செவ்வாயன்று, அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளைப்
பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின்
ஹேங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன்
முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகளும் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
* அமெரிக்கா - ஜப்பான் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியது
* ஆசிய, உலகளாவிய சந்தைகளில் சாதகமான சூழல் நிலவியது
நிப்டி: 25,219.90
மாற்றம்: 159.00 ஏற்றம் பச்சை
சென்செக்ஸ்: 82,726.64
மாற்றம்: 539.83 ஏற்றம் பச்சை
உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)
டாடா மோட்டார்ஸ் 2.60
பார்தி ஏர்டெல் 2.20
ஸ்ரீராம் பைனான்ஸ் 2.16
சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%)
டாடா கன்ஸ்யூமர்ஸ் 1.92
ஹிந்துஸ்தான் யுனிலீவர் 0.92
இன்போசிஸ் 0.76
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 4,209 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.45 சதவீதம் குறைந்து, 68.29 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா குறைந்து, 86.43 ரூபாயாக இருந்தது.