sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

பங்கு சந்தை நிலவரம்

/

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்


ADDED : ஜூலை 05, 2025 12:19 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்றத்துடன் முடிவடைந்த சந்தைகள்


வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் ஏற்றத்துடன் நிறைவு செய்தன. உலகளாவிய பங்குச்சந்தை களின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் துவங்கிய போது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.

அமெரிக்க வரி விதிப்பு தொடர்பான காலக்கெடு நெருங்கி வருவது, அன்னிய முதலீடுகள் தொடர்ச்சியாக வெளியேறுவது, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகிய காரணங்களால்,

முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை.

இதனால், சந்தைகளில் தள்ளாட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவு பாதைக்கு திரும்பின. எனினும், கடைசி மணி நேரத்தில், வங்கித்துறை சார்ந்த பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கினர். இதன் காரணமாக முடிவில் நிப்டி, சென்செக்ஸ் சிறிய உயர்வுடன் நிறைவடைந்தன.

உலக சந்தைகள்


வியாழனன்று அமெரிக்க சந்தைகள் உயர்வுடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய்எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடனும்; தென்கொரியாவின் கோஸ்பி,ஹாங்காங்கின் ஹேங்சேங் குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன.ஐரோப்பிய சந்தைகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின.

உயர்வுக்கு காரணங்கள்


1உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்

2வங்கித்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கியது

அன்னிய முதலீடு


அன்னிய முதலீட்டாளர்கள் 760 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்


உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.03 சதவீதம் குறைந்து, 68.03 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு


அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 பைசா அதிகரித்து, 85.40 ரூபாயாக இருந்தது.






      Dinamalar
      Follow us