
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 931 புள்ளிகள் குறைந்து, 75,365 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 346 புள்ளிகள் குறைந்து, 22,904 புள்ளியாக இருந்தது. பி.எஸ்.இ., மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் சரிவுடன் முடிந்தன.
அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு உண்டாக்கிய வர்த்தக போர் அச்சம், சர்வதேச சந்தையில் தாக்கம் செலுத்தியது. கச்சா எண்ணெய் விலை போக்கும் சரிவு கண்டது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர்.

