
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் சரிவுடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 589 புள்ளிகள் குறைந்து, 79,213 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 208 புள்ளிகள் குறைந்து 24,039 புள்ளிகளாக இருந்தது. ஸ்மால் மற்றும் மிட்கேப் பங்குகள் அதிகம் இறங்குமுகம் கண்டன.
பஹல்காம் தாக்குதலை அடுத்து எழுந்துள்ள பதற்றமான சூழல், சந்தையில் தாக்கம் செலுத்தியது. முதலீட்டாளர்கள் எச்சரிக்கையான அணுகுமுறை கொண்டிருந்தனர். எனினும், வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

