
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக இறங்குமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1046 புள்ளிகள் உயர்ந்து, 82,408 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 319 புள்ளிகள் உயர்ந்து, 25,112 புள்ளியாக இருந்தது.
இஸ்ரேல்- - ஈரான் மோதல் போக்கு மற்றும் இந்த மோதல் தொடர்பான அமெரிக்க அதிபரின் கருத்து தாக்கம் செலுத்தியது. கச்சா எண்ணெய் விலை போக்கும் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.