sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது

/

செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது

செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது

செப்டம்பரில் நாட்டின் ஏற்றுமதி சிறிதளவு அதிகரித்தது


ADDED : அக் 16, 2024 10:52 PM

Google News

ADDED : அக் 16, 2024 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்தியாவின் ஏற்றுமதி, சற்று அதிகரித்து, கிட்டத்தட்ட 2.87 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி உள்ளது. கடந்தாண்டு இதே காலத்தில், 2.86 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து மத்திய அரசு தெரிவித்துஉள்ளதாவது:

கடந்த செப்டம்பர் மாதத்தில், நாட்டின் இறக்குமதி மதிப்பு 1.60 சதவீதம் அதிகரித்து, 4.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

கடந்தாண்டு இதே காலத்தில், இறக்குமதி மதிப்பு 4.52 லட்சம் கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது. வர்த்தக பற்றாக்குறை 1.72 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த ஆகஸ்ட் மாதம், முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் 9.30 சதவீதம் குறைந்து இருந்தது. நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், ஏற்றுமதி ஒரு சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 17.70 லட்சம் கோடி ரூபாயாகவும்; இறக்குமதி 6.16 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 29.10 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் நிலவரம்

ஏற்றுமதி 2.87 இறக்குமதி 4.59வர்த்தக பற்றாக்குறை 1.72(ரூபாய் லட்சம் கோடியில்)



தரம் அதுவே நிரந்தரம்

நம் ஏற்றுமதி மானியங்கள் அல்லது அரசின் ஆதரவால் மட்டும் வந்து அதிகரித்து விடுவதில்லை. உலகின் பிற நாடுகளின் கதவு களை மூடுவதாலும், நமக்கு வந்துவிடாது. நாம் 'சுயசார்பு இந்தியா' என்பதை அடைய, நாடு தன்னம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். அந்த நம்பிக்கையானது, 'தரம் என்பது நம் பணி அல்ல. அது நம் கடமை' என அனைவரும் தீர்மானித்தால் மட்டுமே வரும்.- பியுஷ் கோயல், மத்திய அமைச்சர், வர்த்தகம், தொழில்துறை








      Dinamalar
      Follow us