sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ பெண்களுக்கு பாதுகாப்பு கேரளாவில் வலுக்கும் குரல்

பெண்களுக்கு பாதுகாப்பு கேரளாவில் வலுக்கும் குரல்

பெண்களுக்கு பாதுகாப்பு கேரளாவில் வலுக்கும் குரல்


ADDED : ஆக 21, 2024 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2024 02:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம், கேரளாவில், பிரபல நடிகை மீது, 2017ல் நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் புகாரை தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை மாநில அரசு அமைத்தது. மலையாள திரையுலகில் பெண்களின் நிலை குறித்து இந்த கமிட்டி ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. ஐந்தாண்டுகளுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான விபரங்களை கமிட்டி தெரிவித்துள்ளது. 'இச்சைகளுக்கு இணங்குபவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மறுப்பவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது கேரளாவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்தும்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் தலையிட்டு உடனடி விசாரணை நடத்த மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.

“நீதிபதி ஹேமா கமிட்டி பரிந்துரையின்படி, படப்பிடிப்பு தளங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குறைகளை தீர்க்கவும் கமிட்டிகளை உருவாக்கும்படி அரசுக்கு பரிந்ரைப்போம்,” என, மகளிர் ஆணைய தலைவி சதி தேவி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us