ADDED : அக் 04, 2011 03:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியின் புறநகர்ப்பகுதியான ரோகிணியில் நடந்த இளைஞர் காங்கிரஸ் பேரணியில் கலந்து கொள்ள டில்லி மெட்ரோ ரயிலில் ராகுல் பயணம் செய்தார்.
தனது 12, துக்ளக் ரோடு அலுவலகத்திற்கு அருகிலுள்ள ரேஸ் கோர்ஸ் ரோடு மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து, மேற்கு ரோகிணி மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்ற அவர், அங்கிருந்து டாக்ஸி மூலம் பேரணி நடந்த ரோகிணி ஜப்பானிஷ் பூங்காவிற்கு சென்றுள்ளார். டாக்சியில் செல்ல ராகுல் தனக்கு ரூ. 200 அளித்ததாக அவருக்கு டாக்ஸி ஓட்டிய டிரைவர் ஸ்ரவன் பெருமையுடன் தெரிவித்தார்.

