ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்
ரயில்வே வாரிய தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவர் நியமனம்
ADDED : ஆக 28, 2024 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ரயில்வே வாரியத்தின் தலைவராக முதல்முறையாக பட்டியலினத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாரியத்தின் தலைவராக உள்ள ஜெய வர்மசின்ஹா வரும் 31-ம் தேதியுடன் பணிநிறைவு பெறுகிறார்.இதையடுத்து இந்திய ரயில்வே மேலாண்மை சேவை பிரிவில் பணியாற்றிவரும் சதீஷ்குமார், ரயில்வே வாரியத்தின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட்டார்.
இவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது நியமனத்திற்கு அமைச்சரவை நியமன குழு ஒப்புதல் அளித்து. வரும் செப்.01-ம் தேதி முதல் பொறுப்பேற்கிறார். இதன் மூலம் ரயில்வே வாரிய தலைவர் பதவிக்கு முதன் முறையாக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

