sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விநாயகர் ஊர்வலம் பெங்களூரில் மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு

/

விநாயகர் ஊர்வலம் பெங்களூரில் மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு

விநாயகர் ஊர்வலம் பெங்களூரில் மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு

விநாயகர் ஊர்வலம் பெங்களூரில் மதுக்கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு


ADDED : செப் 14, 2024 08:08 AM

Google News

ADDED : செப் 14, 2024 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: நாகமங்களா கலவரத்தை அடுத்து, பெங்களூரில் இன்றும், நாளையும் நடக்கும் விநாயகர் சிலை ஊர்வலம்; 16ம் தேதி நடக்கின்ற மிலாடி நபி ஊர்வலத்துக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மதுக்கடைகள் மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாண்டியா மாவட்டம், நாகமங்களாவில், விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது, கலவரம் வெடித்தது. இதனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் நடக்கும் ஊர்வலத்தின்போது, எச்சரிக்கை வகிக்கும்படி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரின் வெவ்வேறு பகுதிகளில், இன்றும், நாளையும் விநாயகர் சிலை ஊர்வலமும்; வரும் 16ம் தேதி மிலாடி நபி நடப்பதால், போலீசார் அலர்ட் ஆகி உள்ளனர்.

முக்கிய ஆலோசனை


இது தொடர்பாக, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, உயர் அதிகாரிகளுடன் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

பின், அவர் வெளியிட்ட அறிக்கை:

பெங்களூரின் பல பகுதிகளில், 14, 15ம் தேதிகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது. அப்போது அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், சட்டம் - ஒழுங்கு காக்கும் வகையில், 14ம் தேதி விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடக்கின்ற ஜே.சி., நகர், ஆர்.டி.நகர், ஹெப்பால், சஞ்சய்நகர், டி.ஜே., ஹள்ளி, பாரதிநகர், புலிகேசிநகர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 14ம் தேதி காலை 6:00 மணி முதல், 15ம் தேதி காலை 6:00 மணி வரை, மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்படுகிறது.

பாரதிநகர், சிவாஜிநகர்


இது போன்று, 15ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடக்கின்ற கமர்சியல் தெரு, பாரதிநகர், சிவாஜிநகர், புலிகேசிநகர், ஹலசூரு, எலஹங்கா உபநகரா, எலஹங்கா, வித்யாரண்யபுரா ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 15ம் தேதி காலை 6:00 மணி முதல், 16ம் தேதி காலை 6:00 மணி வரை, மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்படுகிறது.

மேலும், மிலாடி நபி ஊர்வலம் நடக்கின்ற 16ம் தேதி, சம்பிகேஹள்ளி, பாகலுார், ஹென்னுார், கோவிந்தபுரா, கே.ஜி., ஹள்ளி, டி.ஜே., ஹள்ளி, புலிகேசிநகர், சிவாஜிநகர், கமிர்சியல் தெரு.

பாரதிநகர், ஜே.சி., நகர் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், 16ம் தேதி காலை 6:00 மணி முதல், 17ம் தேதி காலை 6:00 மணி வரை, மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்படுகிறது.

ஹோட்டல், ரெஸ்டாரண்டகளில் விற்பனை செய்ய விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடத்தும் அமைப்பினரிடம், எத்தனை சிலைகள் வருகின்றன, அவர்களின் விபரம் குறித்து போலீசார் முன் கூட்டியே நேற்றுசேகரித்தனர்.

போக்குவரத்தில் மாற்றம்

சுரானா கணேசா விசர்ஜன ஊர்வலம் நடக்கின்ற 15ம் தேதி, விநாயகர் சிலைகள் ஹலசூரில் கரைக்கப்படுகின்றன. அன்றைய தினமும், புலிகேசிநகர், சிவாஜிநகர் போக்குவரத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்து, கிழக்கு மண்டல டி.சி.பி., குல்தீப்குமார் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். கென்சிங்டன் - மார்பி சாலை சதுக்கத்தில் இருந்து, எம்.இ.ஜி., சென்டர் மார்க்கமாக ஹலசூரு ஏரிக்கரை வரை இரு மார்க்கமும் திருவள்ளுவர் சிலை சதுக்கம் - அண்ணாசாமி முதலியார் சாலையில் இருந்து, ஆர்.பி.ஐ., சதுக்கம் மார்க்கமாக, ஹலசூரு ஏரிக்கரை வரை செல்ல கூடாது. ஆனால், மரு மார்க்கத்தில், ஹலசூரு ஏரிக்கரையில் இருந்து, திருவள்ளுவர் சிலை சதுக்கம் வரை செல்லலாம் செயின்ட் ஜான்ஸ் சாலையின் ஷெப்பிங்ஸ் சாலை, திம்மையா சாலை, நாராயணபிள்ளை தெரு, காமராஜர் தெரு, சிவன் ஷெட்டி கார்டன், சாலைகளில், அனைத்து வகையான வாகனங்களுக்கும் தடை டிக்கென்சன் சதுக்கத்தில் இருந்து, பாரதிநகர் நோக்கி செல்லக் கூடாது செயின்ட் ஜான்ஸ் சாலையின், ஸ்ரீ சதுக்கத்தில் இருந்து வரும் எந்த வாகனங்களும் செல்லக் கூடாது.ஹலசூரு ஏரியை சுற்றி உள்ள கென்சிங்டன் சாலை, அண்ணாசாமி முதலியார் சாலை, செயின்ட் ஜான்ஸ் சாலை, ஷேப்பிங்ஸ் சாலை, திம்மையா சாலை, நாராயணபிள்ளை தெரு, காமராஜர் சாலை, சிவன் ஷெட்டி கார்டன் ஆகிய பகுதிகளில், நாளை முழுதும் அனைத்து வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



16ல் கட்டுப்பாடுகள்

மிலாடி நபியான வரும் 16ம் தேதி அன்று விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடு: நேதாஜி ஜங்ஷனில் இருந்து டேனரி சாலைக்கு போட்டரி சதுக்கம் வழியாக செல்லவும்; நேதாஜி ஜங்ஷன் முதல் ஹெய்ன்ஸ் சதுக்கம் வரை அனைத்து வாகனங்களுக்கும் தடை மாஸ்க் ஜங்ஷன் முதல் எம்.எம்., சாலை ஜங்ஷன் தற்காலிகமாக ஒற்றை பாதையாக மாற்றம் நாகவாரா ஜங்ஷன் முதல் போட்டரி சதுக்கும் வரை அனைத்து வாகனங்களுக்கும் தற்காலிக தடை. கே.ஆர்., சதுக்கம் முதல் போலீஸ் கார்னர் வரையிலான நிருபதுங்கா சாலை போலீஸ் கார்னர் முதல் மைசூரு பாங்க் சதுக்கும் வரையிலான கே.ஜி., சாலை டவுன் ஹால் ஜங்ஷன் முதல் போலீஸ் கார்னர் வரையிலான என்.ஆர்., சாலை என்.ஆர்., ஜங்ஷன் முதல் சுப்பையா சதுக்கம் வரையிலான பி.காளிங்கா ராவ் சாலை ஹட்சன் சதுக்கம் முதல் சித்தலிங்கய்யா சதுக்கம் வரையிலான கஸ்துாரிபா சாலை மற்றும் சித்தலிங்கய்யா சதுக்கம் முதல் குயின்ஸ் சாலை சித்தலிங்கய்யா சதுக்கம் முதல் ஆர்.ஆர்.எம்.ஆர்., ஜங்ஷன் வரையிலான மல்லையா ஆஸ்பிடல் சாலை ரிச்மன்ட் சதுக்கம் முதல் ஹட்சன் சதுக்கம் வரையிலான ஆர்.ஆர்.எம்.ஆர்., சாலை அனில் கும்ப்ளே சதுக்கம் முதல் குயின்ஸ் சதுக்கம் வரையிலான எம்.ஜி., சாலை அனில் கும்ப்ளே சதுக்கம் முதல் பி.ஆர்.வி., ஜங்ஷன் வரையிலான சென்ட்ரல் ஸ்டிரீட் பாலேகுந்த்ரி சதுக்கம் முதல் குயின்ஸ் சதுக்கம் வரையிலான குயின்ஸ் சாலை கே.ஆர்., சதுக்கம் முதல் பாலேகுந்த்ரி சதுக்கம் வரையிலான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலை மஹாராணி சதுக்கம் முதல் கே.ஆர்., சதுக்கம் வரையிலான சேஷாத்திரி சாலை மைசூரு பாங்க் சதுக்கம் முதல் கே.ஆர்., சதுக்கம் வரையிலான ஓல்டு போஸ்ட் ஆபீஸ் சாலை கப்பன் பூங்கா உட்புறம் நேதாஜி ஜங்ஷன், எம்.எம்.சாலை, மாஸ்க் சாலை, குளோஸ் சாலை, சவுந்தர்ஸ் சாலை, செயின்ட் ஜான்ஸ் சாலை, மில்லர்ஸ் சாலை முதல் ஹெய்ன்ஸ் ஜங்ஷன் வரை போட்டரி சதுக்கத்தில் இருந்து ஹெய்ன்ஸ் ஜங்ஷன் வரை கோவிந்தபுரா ஜங்ஷன் முதல் கோவிந்தபுரா எல் அன்ட் ஓ போலீஸ் நிலையம் வரை எச்.பி.ஆர்., லே - அவுட் சித்தப்பா ரெட்டி ஜங்ஷன் முதல் நரேந்திரா டென்ட் ஜங்ஷன் வரையிலான சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.



மிலாது நபி ஊர்வலம்: ஆயுதங்களுக்கு தடை

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:மிலாடி நபியை முன்னிட்டு, செப்., 16ம் தேதி முஸ்லிம்கள், மசூதிகளில் தொழுகை முடித்து, ஊர்வலமாக அந்தந்த பகுதியில் ஒய்.எம்.சி.ஏ., மைதானம், மில்லர்ஸ் சாலை குட்டுசாப் ஈத்கா மைதானம், சிவாஜி நகர் சோட்டா மைதானம், பாரதி நகர் சுல்தான்ஜி குன்டா மைதானம் உட்பட நகரின் பல பகுதிகளில் செல்வர். அன்றைய தினம் ஊர்வலத்தின் இரு பக்கமும் தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நின்று, ஊர்வலம் அமைதியான முறையில் செல்லவும், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள், கூர்மையான ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது டி.ஜே., இசை கருவிகளை அதிக ஒலியுடன் கொண்டு செல்லக்கூடாது ஆட்சேபனைக்குரிய வகையில் பதாகைகள் கொண்டு செல்லக்கூடாது கோவிலோ அல்லது தேவாலயங்கள் அருகில் கோஷங்கள் எழுப்பக்கூடாது மின்சார தடை ஏற்படாத வகையில், பெஸ்காம் ஊழியர்களை ஊர்வலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் வைத்திருக்கக் கூடாது ஊர்வலத்தில் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்பவர்கள், ஒரு வாகனத்தில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்காத வகையில் காலை 6:00 முதல் 10:00 மணி வரை குறைந்த ஒலியுடன் பயன்படுத்த, உள்ளூர் போலீசில் அனுமதி பெற வேண்டும்இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஜே.சி., நகரில் இருந்து சிவாஜி நகர் கன்டோன்மென்ட்; பெல்லஹள்ளி கிராசில் இருந்து நாகவாரா சிக்னல் வரை; ராஜகோபால் நகர் பிரதான சாலையில் இருந்து பீன்யா இரண்டாவது ஸ்டேஜ் வரை; சவுத் எண்ட் சதுக்கத்தில் இருந்து ஆர்.வி., சாலை அருகிலுள்ள லால்பாக் வெஸ்ட் கேட் சதுக்கம் வரை; கீதா ஜங்ஷன் முதல் சவுத் எண்டு சதுக்கம் வரை; பென்ட்ரே ஜங்ஷன் முதல் ஓபலப்பா கார்டன் ஜங்ஷன் வரை; மஹாலிங்கேஸ்வரா லே - அவுட் முதல் ஆடுகோடி வரை.



மிலாது நபி ஊர்வலம்: ஆயுதங்களுக்கு தடை

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:மிலாடி நபியை முன்னிட்டு, செப்., 16ம் தேதி முஸ்லிம்கள், மசூதிகளில் தொழுகை முடித்து, ஊர்வலமாக அந்தந்த பகுதியில் ஒய்.எம்.சி.ஏ., மைதானம், மில்லர்ஸ் சாலை குட்டுசாப் ஈத்கா மைதானம், சிவாஜி நகர் சோட்டா மைதானம், பாரதி நகர் சுல்தான்ஜி குன்டா மைதானம் உட்பட நகரின் பல பகுதிகளில் செல்வர். அன்றைய தினம் ஊர்வலத்தின் இரு பக்கமும் தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நின்று, ஊர்வலம் அமைதியான முறையில் செல்லவும், வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள், கூர்மையான ஆயுதங்களை கொண்டு செல்லக்கூடாது டி.ஜே., இசை கருவிகளை அதிக ஒலியுடன் கொண்டு செல்லக்கூடாது ஆட்சேபனைக்குரிய வகையில் பதாகைகள் கொண்டு செல்லக்கூடாது கோவிலோ அல்லது தேவாலயங்கள் அருகில் கோஷங்கள் எழுப்பக்கூடாது மின்சார தடை ஏற்படாத வகையில், பெஸ்காம் ஊழியர்களை ஊர்வலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் வைத்திருக்கக் கூடாது ஊர்வலத்தில் இரு சக்கர வாகனங்கள் பங்கேற்பவர்கள், ஒரு வாகனத்தில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்காத வகையில் காலை 6:00 முதல் 10:00 மணி வரை குறைந்த ஒலியுடன் பயன்படுத்த, உள்ளூர் போலீசில் அனுமதி பெற வேண்டும்இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஜே.சி., நகரில் இருந்து சிவாஜி நகர் கன்டோன்மென்ட்; பெல்லஹள்ளி கிராசில் இருந்து நாகவாரா சிக்னல் வரை; ராஜகோபால் நகர் பிரதான சாலையில் இருந்து பீன்யா இரண்டாவது ஸ்டேஜ் வரை; சவுத் எண்ட் சதுக்கத்தில் இருந்து ஆர்.வி., சாலை அருகிலுள்ள லால்பாக் வெஸ்ட் கேட் சதுக்கம் வரை; கீதா ஜங்ஷன் முதல் சவுத் எண்டு சதுக்கம் வரை; பென்ட்ரே ஜங்ஷன் முதல் ஓபலப்பா கார்டன் ஜங்ஷன் வரை; மஹாலிங்கேஸ்வரா லே - அவுட் முதல் ஆடுகோடி வரை.








      Dinamalar
      Follow us